
நாமக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா. இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுப்பிரமணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தான் திருச்சிக்கு பணி மாறுதல் பெற்றார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வகுரம்பட்டி ரயில்வே நிலையத்திற்கு தம்பதிகள் சென்ற நிலையில் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது தான் காரணம் வெளிவந்துள்ளது.
அதாவது அவர்களின் மகள் காதலித்த நிலையில் அதற்கு பிரமிளா மற்றும் சுப்பிரமணி இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மகள் காதலை கைவிட மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.