
தமிழகத்தில் தொழில் முனைவோர் மூலமாக நடத்தப்படும் இணைய சேவை மையங்களில் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையின் பல்வேறு பிரிவுகள் மூலமாக இணைய சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த இணைய சேவை மையங்கள் மூலமாக 235க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த இடங்களில் இணைய மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் அரசு சேவைகளும் திட்டங்களும் இணைய சேவை மையங்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் விதமாக அவற்றை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழக முழுவதும் தற்போது தொழில் முனைவோர் மூலமாக 24,500 இளைய சேவை மையங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இதன் எண்ணிக்கையை 50,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான வருமானச் சான்று, ஜாதி சான்று மற்றும் இருப்பிட சான்று என 235க்கும் மேற்பட்ட அரசின் சேவைகளை பெற இணைய சேவை மையங்களில் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கு ஒவ்வொன்றுக்கும் அதன் சேவை ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.