![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/44097143-eaab-4b6f-8cfb-342c2db4d3e4-1.jpg)
தமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லேமூரில் ஐந்து மாணவர்கள், தேங்காய் பட்டினத்தில் சிறுமி, குளைச்சலில் இரண்டு இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.