தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தற்போது சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் வரவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக மத்திய அரசாங்கம் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அதோடு தமிழக அரசாவது ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.