
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களுக்கு எளிதில் ரேஷன் சேவைகளை வழங்க அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு துறையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரொக்கம் இல்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரேஷன் கடைகளில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதுவரை 10848 கடைகளில் UPI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.