தமிழக அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தற்போது புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதம் 20 ஆயிரம் ஓய்வூதியம் 21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 10 ஆயிரத்திலிருந்து 10 ,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கட்டபொம்மன் மற்றும் வ.உ சிதம்பரனார் வழி தோன்றல்களின் ஓய்வூதியமும் 10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.