
தமிழக அரசு மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. அதாவது இன்று பிறை தெரியாத காரணத்தினால் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை என்றும் அன்றைய தினம் பொது விடுமுறை என்றும் இருந்தது. ஆனால் தற்போது மிலாடி நபி பண்டிகை தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக செப்டம்பர் 6- தேதி முதல் பிறை என்று ஹரிசியத் முறைப்படி கடைபிடிக்கப்பட இருக்கிறது.