சென்னையில் தனியார் மினி பேருந்துகளை வருகிற பிப்ரவரி மாதம் முதல் இயக்குவதற்கு போக்குவரத்து துறை தற்போது அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம் மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் அரசு சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதல் சேவைக்காக தற்போது தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் முதல் மினி பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.