
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் 5.47 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
அதோடு, இதுபோன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு திமுக சிம்மசொப்பனமாக இருப்பதாக கூறினார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.