தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 26 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு பள்ளிக்கு சுமார் 20 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிவு நீர் மறுசுழற்சி, மூலிகை தோட்டம் உருவாக்கம், காய்கறி தோட்டம் அமைத்தல், மக்கு உரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மேலும் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் போன்றவைகள் அமைக்கப்பட இருக்கிறது.