
தமிழக சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கேள்வி நேரத்தில் பதில் அளித்த செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த செப்டம்பர் நான்காம் தேதி 314 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான விருதாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.