
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நரியப்பனூரில் புனித அந்தோனியார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட விருதாச்சலம் பகுதிக்கு இன்று காலை பாதயாத்திரையாக பத்துக்கு மேற்பட்டோர் நடந்து சென்றனர்.
இவர்கள் மணலூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சாலையில் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.