
வருடந்தோறும் போலீசாருக்கான பணி இடமாறுதல் உத்தரவானது வெளியிடப்படும். அதில், 3 வருடங்களுக்கும் மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு எஸ்.ஐ., முதல் 2ஆம் நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வருடத்திற்கான பணியிட மாறுதல் உத்தரவை எதிர்பார்த்து போலீசார் காத்திருந்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில், சிறப்பு எஸ்.ஐ.க்கள் உள்பட 180 பேருக்கு இடமாறுதல் அளித்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.