தமிழகத்தில் இன்று கோவை மற்றும் தேனி மாவட்டம் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.