தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதி வரையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இடையில் பெஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. அவ்வப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

அந்த வகையில் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.