
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வருகிறார்கள். அந்த வகையில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் கனமழையின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.