திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக மார்ச் 15ஆம் தேதி வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். இதே போன்று  அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.