தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் அவர்களுடைய வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அதாவது சம்பளம் தாமதமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மாத இறுதி நாளான 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி கணக்குகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்படும். அதே நேரத்தில் கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால் சம்பளம் அதற்கு முந்தைய நாள் அல்லது விடுமுறை முடிந்த பிறகு செலுத்தப்படும்.

இந்நிலையில் நடப்பு மார்ச் மாதத்தில் வருடாந்திர கணக்குகள் முடிக்கப்பட இருப்பதால் இந்த மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தப்பட மாட்டாது என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த மாதம் முடிந்த பிறகு தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் அதன்படி ஏப்ரல் 2-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம்  வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.