
தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், பத்து வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும். பத்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.