சென்னையில் இருந்து நெல்லை வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்ளே வெகு தூரம் இயக்கப்படும் ரயில்களில் ஒன்றாக இருப்பதால் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் வரை இயக்கப்படுகின்றது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால் அக்டோபர் 30-ஆம் தேதி இன்று காலை ஒன்பது புள்ளி 45 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயணத்தில் எர்ணாகுளம் குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்களில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.