வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய  பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று சென்னை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 27 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.