வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தமிழகத்தில் திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.