தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு பறந்துள்ளது. அதாவது கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நாதக கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது என்சிசி முகாம் நடத்துவதாக கூறி பள்ளியில் பயிற்சி அளிப்பதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை என்சிசி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்சிசி முகாம் நடத்துவதற்கு எந்தவித அனுமதியும் தாங்கள் வழங்கவில்லை எனவும் சிவராமனுக்கும் என்சிசிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியது.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் எந்தவித பயிற்சி முகாம் நடத்தினாலும் அதற்கு பெற்றோர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் முன்பாக அனுமதி பெற வேண்டும். இதனை மீறி முகாம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்கள் மூலமாக மட்டுமே பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.