
உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் லால் என்ற இளைஞர், பஞ்சாப் மாநிலம் டர்ன் டர்ன் மாவட்டத்தில் உள்ள மாட்டுபண்ணை ஒன்றில் 15 ஆண்டுகளாக அடிமைப் போன்று வேலை செய்யவைக்கப்பட்டிருந்த சம்பவம் கடந்த வாரம் வெளியான வீடியோவால் தெரியவந்தது.
டைனிவால் கிராமத்தில் உள்ள கால்நடை குடிலில், ராஜேஷ் மிகவும் சோர்ந்த நிலையில் வேலை செய்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி, அதற்கு மத்தியிலும் உத்தராகண்ட் அரசியல் தலைவர்களின் கவனமும் குவிந்தது.
இது தொடர்பாக, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் கார்வால் தொகுதி எம்.பி. அனில் பலுனி ஆகியோர் நேரடியாக பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவிடம் நடவடிக்கை கோரி விரைவாக செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தலைமையில் போலீசார் செயல்பட்டு சில மணி நேரத்தில் ராஜேஷை மீட்டனர். தற்போது அவரை அடிமைப் போன்று வைத்திருந்த பண்ணை உரிமையாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
मुझे सोशल मीडिया पर एक वीडियो मिला है जिसमें बताया गया है कि उत्तराखंड के नारायणबगड़ (चमोली) के एक नौजवान को पंजाब के किसी जगह पर एक गौशाला मालिक ने पंद्रह साल से बंधुआ मजदूर बनाकर रखा हुआ है। वीडियो बनाने वाले सज्जन द्वारा युवक को मुक्त कराने और मदद करने की बात की जा रही है।… pic.twitter.com/cJNmrz1SQy
— Anil Baluni (@anil_baluni) June 25, 2025
“>
2008ல் புறப்பட்ட ராஜேஷ் – 2010ல் தொடர்பு துண்டிப்பு”
சாமோலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி தெரிவித்ததாவது, ராஜேஷ் 2008ல் வேலைக்காக வெளியேறி, 2010க்குப் பிறகு குடும்பத்துடன் தொடர்பு இல்லாமல் போனார். தற்போது மாவட்ட நிர்வாகம் அவரை வீடு திரும்ப செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தராலி துணை ஆட்சியர் பங்கஜ் பாட்டும் அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து உறுதி அளித்துள்ளார். “நாம் ஒரு என்.ஜி.ஓ-வுடன் இணைந்து ராஜேஷை ஒரு வாரத்துக்குள் வீடு கொண்டு வருவோம்” என அவர் கூறினார்.
கண்ணீரில் கரைந்த குடும்ப சந்திப்பு:
ராஜேஷின் மீட்பு செய்தி உறுதியாக கிடைத்தவுடன், அவரது தாய் மற்றும் சகோதரி உடனடியாக பஞ்சாப் சென்றனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் நடந்த சந்திப்பு நெஞ்சை உருக்கும் தருணமாக அமைந்தது. சமூக வலைதளத்தில் எம்.பி. அனில் பலுனி, “பஞ்சாப் ஆளுநரின் துரித நடவடிக்கையால் ராஜேஷை மீட்க முடிந்தது. இது ஒரு பெரிய வெற்றி” என்று தெரிவித்தார். இந்நிலையில், ராஜேஷின் மீள்பதிவுக்கும், வாழ்க்கையை மறுதொடக்கம் செய்யவும், அனைத்து வகையான உதவிகளை அரசு வழங்கும் என சாமோலி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.