வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் பாம்பின் வாலை பிடிக்க முயற்சி செய்கிறார். திடீரென மற்றொரு சிறுவன் அங்கு வந்து பாம்பை பிடித்து தூக்க முயற்சி செய்கிறார்.

அந்த பாம்பு சிறுவனை 2,3 முறை கொத்தி விடுகிறது. ஆனாலும் விடாமல் கொஞ்சம் கூட பயமில்லாமல் அந்த சிறுவன் பாம்பின் தலையை இறுக்கமாக பிடித்து கொள்கிறார். அந்த வீடியோ பார்ப்போரை பதற வைத்துள்ளது.