
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக நேற்று டெல்லிக்கு சென்றுள்ளார். அதாவது பாமகவில் தனக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறும் நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கவும் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளாதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த பயணம் தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்களை முன்னிட்டு என்றாலும், இதன் பின்னணியில் அரசியல் புரிதல்கள் உள்ளதாக கட்சிக்குள்ளேயே கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன.
இந்நிலையில், பாமாக்கா எம்எல்ஏ அருள், அன்புமணியின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “முழு அதிகாரம் டாக்டர் ராமதாஸ் ஐயாவிடமே உள்ளது. இப்போது பதவிக்காகவே அந்த விசுவாச கூட்டத்தை விட்டுவிட்ட நிலைபோல தோன்றுகிறது. ‘மருத்துவரைத் தொடர்ந்து வரும் விசுவாசிகள் கூட்டம்’ என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். ஆனால், இன்று பதவிக்காக அப்பாவை விட்டு மகன் சென்று விட்டார் என்பது, வருத்தமளிக்கிறது” என்றார்.
அதன் பின்னணியில், “எங்கள் சமூகத்தில் ஒரு மகன் என்பது அப்பாவுக்கே கட்டுப்பட்டவராகவே இருக்க வேண்டும் என்பதே பாரம்பரியம். அந்த நம்பிக்கையை மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கிராமங்களில் பெண்கள் கூட இந்த விவகாரத்தை பேசுகின்றனர். இது தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்பதால்தான் பயமாக இருக்கிறது” என அருள் எம்எல்ஏ கூறினார்.
மேலும், “இனி எங்கள் விஸ்வாசிகள் யாரை பின்தொடர்வார்கள்? என்பது எங்களுக்கே குழப்பமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் மகன் அப்பாவை விட்டு செல்லும் நிலை என்றால், அது கட்சியின் நம்பிக்கையை அழிக்கக்கூடியது. இது போன்ற நிலைமைக்கு அன்புமணி போகக்கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கடந்த 45 வருடங்களாக கட்சியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் ஐயா ராமதாஸ் நியமித்து வரும் நிலையில் பேராசிரியர் தீரன் தலைமையில் இருந்த போதிலும் ஜிகே மணி தலைவராக இருந்தபோதிலும் இதே நடைமுறைதான் தொடர்ந்தது. தற்போது அன்புமணி தலைவராக இருந்தாலும் முழு அதிகாரமும் ஐயா ராமதாஸிடம் மட்டுமே உள்ளது என்று கூறினார்.