T20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதை ராகுல் டிராவிட் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நடப்பு டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கௌதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ முயற்சித்து வருகிறது.