கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவரம்பு பகுதியில் ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரத்தில் இருக்கும் கடையில் 15 ஆயிரத்து 999 மதிப்புள்ள எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய சில மாதங்களிலேயே டிவி வேலை செய்யாமல் போனதால் அதனை சரி செய்து தருமாறு ரெனிஸ் கடைக்காரரிடம் கூறியுள்ளார். ஆனால் கூறியபடி கடைக்காரர் டிவியை சரி செய்து கொடுக்கவில்லை. அப்போது தயாரிப்பு பிரச்சனை இருப்பதாலும், வாரண்டி நாட்களுக்குள் பழுதடைந்ததாலும் புதிய டிவி தர வேண்டும் என ரெனிஸ் கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் புதிய டிவியை வழங்கவில்லை. இதனால் மன உளைச்சலில் ரெனிஸ் குமரி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் டிவி கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 15 ஆயிரம் ரூபாய் அபராதம், டிவிக்கு செலுத்தப்பட்ட தொகை 15,999 ரூபாய், வழக்கு செலவுத்தொகை 5000 ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு உத்தரவிட்டனர்.
டிவி கடையின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more