அமெரிக்காவின் டெக்ஸை சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிலீமன்ஸ் (21). இதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடந்த அன்று 8 மாத ஆண் குழந்தை டயப்பரில் மலம் கழித்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ஜடொரியா கொதிக்கும் நீரில் தனது குழந்தையை போட்டு ஒன்றும் தெரியாதது போல இருந்தார். இதனால் அலறி துடித்த குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜடோரியாவை தேடி வருகின்றனர்.