தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பா என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்து வைத்த நிலையில் இதனை தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கல்வியை வியாபாரம் ஆக்கியது தான் முதல் தவறு. அதனை மத்திய அரசுக்கு கொடுத்ததும் தவறு. அதனால் தான் ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். மும்மொழி என்பதை தவிர்த்து விட்டு பன்மொழி என்று கூறினால் கூட ஏற்களாம். மாணவர்கள் விரும்பினால் ஹிந்தி படிக்கட்டும்.

ஆனால் அதனைக் கொள்கையாகக் கொண்டு வருவது தவறு. தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பா என்ற செயலியை அறிமுகப்படுத்தியது பிரான்ட் செய்வது போல் உள்ளது. ஜெயலலிதாவை அம்மா என்று பொதுமக்கள் அழைத்தது இயற்கையாக அமைந்தது. ஆனால் அப்பா என்ற உறவு முறையை மனதார அழைக்க வேண்டுமே தவிர இப்படி பிரான்ட் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நீங்கள் நல்ல விதமாக ஆட்சி செய்தால் உங்களை மக்களே அப்பா என்று அழைப்பார்கள் போற்றுவார்கள் என்று கூறினார்.