குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான எம்.பி.பி.எஸ் மாணவர் கிஷன் மானெக் செவ்வாய்க்கிழமை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தலைசுற்றல்  ஏற்பட்டு  திடீரென்று மயங்கி கீழே  உயிரிழந்தார். இந்த சம்பவம் உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் பிறகு கிஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இவர் ஜாம்நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் (பிஜிவிசிஎல்) இல் உதவிப் பொறியாளரான ஹேமந்த் மானெக்கின் மகன் மானெக் ஆவார். இதைப்போன்று அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களில் இது சமீபத்தியது.

“>