
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா பயன்படுத்துகின்றனர். அதிலும் ரிலீஸ் எடுத்து போடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் அதிகம். இந்த நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியை ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் சுற்றி பார்த்துள்ளனர். அப்போது ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் சென்று ரீல்ஸ் எடுப்பதற்காக நடனம் ஆடும்படி கூறியுள்ளார். அந்த பெண் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார் .ஆனாலும் வாலிபர் விடாமல் பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொந்தரவு அளிக்கிறார்.
இதனை அங்கிருந்த சில சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டனர். அந்த வாலிபர் நடன கலைஞரான சச்சின் ராஜ் என்பது தெரியவந்தது. அந்த வீடியோவை பார்த்த பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அவரை கைது செய்யுங்கள், வெளிநாட்டினாரை துன்புறுத்துகிறார், அவருடைய மற்ற ரயில்களை சரிபார்க்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது.