
கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
தந்தூரி ரொட்டியை தயாரிக்கும் போது ஒருவர் அதில் எச்சில் துப்பியதாக தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஒரு நபர் தந்தூரி அடுப்பில் வைப்பதற்கு முன்பு ரொட்டியில் எச்சில் துப்பியது போன்று தெரிந்தது. அதனை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்படி உணவின் தரம் சரியாக இல்லை என்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் அந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. உணவுத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்காமல் பொதுமக்களின் நலனுக்காக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ये वीडियो ग्रेटर नोएडा का है. आरोप है कि शख़्स तंदूरी रोटी बनाते समय उसमें थूक रहा है. पास में मौजूद किसी व्यक्ति ने इसका वीडियो बना लिया pic.twitter.com/dKxV0PNPf5
— Swaraj Srivastava (@SwarajAjad) September 7, 2024