
மத்திய அரசு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4-ல் இருந்து இரண்டாக இந்தியன் ரயில்வே குறைத்துள்ளது. அதன்படி 26 ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளை குறைத்து அதற்கு பதிலாக AC 3 Tier பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்பிறகு சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களின் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் சமூக வலைதளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தோம். அதை பார்த்தாவது எளிய மக்களுக்காக முன்பதிவில்லா பெட்டிகளை கூட்டுவார்கள் என்று பார்த்தால் வழக்கம்போல் பரிதாபங்களை தான் மேலும் கூட்டியுள்ளது இந்த சேடிஸ்ட் அரசு என்று பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!
அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு! https://t.co/PSuu6MEEqV
— M.K.Stalin (@mkstalin) February 21, 2025