இந்தியாவில் வியாழக்கிழமை பிற்பகலில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல உயிர்கள் பலியாகியுள்ள இவ்விபத்தில் ஒருவரது வாழ்க்கை வெறும் நொடிகளில் முற்றிலும் மாற்றம் கண்டது. அந்த இளம் மனிதர் மும்பையில் இருந்து அகமதாபாத் சென்றடைந்தபோது, காதலியின் மரண செய்தி அவரை இடிக்கும் வகையில் தாக்கியது.

மருத்துவமனையின் காத்திருப்பு கூடத்தில் தனியாக அமர்ந்து, யாரும் ஆறுதல் கூறாமல், மெளனமாக கதறும் அந்த இளைஞரின் காட்சியை சமூக வலைதளங்களில் X பயனர் தமல் சாஹா பகிர்ந்துள்ளார். அவரிடம் “யாரை எதிர்பார்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அவர் மெதுவாக, கண்களில் கண்ணீருடன், “என் காதலி…” என்று கூறினார். அவரது அந்த வார்த்தைகள், அப்போதைய மௌனம், அறையின் அமைதி அனைத்தும் ஒரு நெஞ்சை பதைக்கும் தருணமாக சமூக வலைதள பயனர்களை உருக்க வைத்துள்ளது.

 

இந்த சம்பவம், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. நொடிகளில் வாழ்வு தலைகீழாக மாறும் என்பதை இந்த இளைஞரின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. பலர் இந்த காணொளியைப் பார்த்து உருகியுள்ளனர். “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை” என்று சிந்திக்க வைக்கும் இந்த உணர்வுப்பூர்வ தருணம், ஏர் இந்தியா விபத்தின் மனிதநேயம் நிரம்பிய பக்கம் ஒன்றாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.