பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு 30 வயது இளம்பெண் இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்திருந்தார். இவர் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் பகுதிக்கு சுற்றி பார்ப்பதற்காக பேருந்தில் வந்திருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்த நிலையில் இரவு நேரத்தில் தன் நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு சிகரெட் பிடித்தபடியே ஒருவர் வந்து அந்த பிரான்ஸ் ‌ நாட்டு பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். அவர் தன்னை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில் பின்னர் தன்னுடன் வந்தால் சொர்க்கத்தை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். அதாவது சொர்க்கம் போன்ற ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்த பெண்ணும் சென்ற நிலையில் அவர் காரில் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணிடம் தன்னை கட்டி பிடிக்குமாறு கூறியுள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் செல்போனில் சார்ஜ் இல்லாததால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் சார்ஜ் போடும்படி சொல்லியும் அந்த நபர் கேட்காததோடு பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்தப் பெண் தன்னை ஹோட்டலில் சென்று விடுமாறு கதறி அழுத போதிலும் அவர் விடவில்லை. மறுநாள் காலை 6:00 மணி அளவில் தான் அந்த பெண்ணை அவர் ஹோட்டலில் சென்று விட்டுள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்தப் பெண் நண்பர்களிடம் கூறி கதறி அழுத நிலையில் அவரை ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சித்தார்த் என்பது அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவரை தற்போது போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.