
பஞ்சாப் மாநிலம் தந்திரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ஹரி கிருஷ்ணா பள்ளி முதல்வருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அக்டோபர் 5 அன்று பள்ளி வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் பள்ளியை பரிசோதித்து விட்டு மின்னஞ்சல் வந்த ஐபி அட்ரஸை சோதனை செய்தனர். அப்போது அது அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவனின் மின்னஞ்சல் என்பது தெரிய வந்தது. மேலும் youtubeபரான அவருக்கு பீகாரை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் நண்பராக இருந்த நிலையில் அவர்தான் இத்தகைய செயலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சிறுவன் மின்னஞ்சலை அழிக்க முயன்றதில் தவறுதலாக அனுப்பி விட்டதாக கூறி தனது தவறை ஒப்புக்கொண்ட நிலையில் அவரது வயதை கருத்தில் கொண்டு கண்டித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.