
திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவில் முருகேசன் மற்றும் பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் லெனின் பி சி ஏ படித்து வரும் நிலையில் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் செல்போன் கேட்டு தனது தாயிடம் மகன் தொந்தரவு செய்துள்ளார். செல்போன் வாங்கி தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறியும் மிரட்டியுள்ளார்.
இதனால் தன்னுடைய மகனை மிரட்டுவதற்காக பழனியம்மாள் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வது போல நடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலை பழனியம்மாள் கழுத்தை இறுக்கிய நிலையில் உயிருக்கு போராடினார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியினர் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.