
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் தேகான் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி (CCTV) காட்சிகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெயானந்த் என்பவர், தனது வீட்டின் வெளியே கட்டிலில் அமர்ந்து மொபைல் பயன்படுத்திக் கொண்டிருந்தார், அப்போது அவரது வளர்ப்பு நாய் கீழே தூங்கிக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில், சத்தமில்லாமல் அருகில் நுழைந்த ஒரு சிறுத்தை, தூங்கிக்கொண்டிருந்த நாயை தாக்கியது.
சிறுத்தையை எதிர்பாராத நேரத்தில் பார்த்த ஜெயானந்த், அதிர்ச்சி அடைந்த நிலையில் சிறுத்தை மிக விரைவாக தப்பிச்சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்த பகுதியில் சிறுத்தைகள் வந்து சுற்றித் திரிவதாகவும், மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது தாக்குதல் நடக்கக்கூடும் என்பதால் அச்சம் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.