
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தங்கபாண்டியன் (38) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். அதோடு இந்த விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியிடமிருந்து உறவினர் ஒருவர் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அதில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அது தொடர்பாக மாணவியரிடம் விசாரித்ததில் ஆசிரியர் அனுப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.