கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரு 15 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 வயது சிறுமியுடன் ஒரு வாலிபர் நட்புடன் பழக ஆரம்பித்தார்.

அந்த வாலிபர் சிறுமியை ஒரு ஒதுக்கு புறமான இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த வாலிபரின் நண்பர்கள் 5 பேரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டி மீண்டும் அவரை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக தற்போது தான் சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வரும் நிலையில் கைதானவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை காவல் ஆணையர் போர்ஸ் பூஷன் குலாப்ராவ் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.