ஆந்திர மாநிலத்தில் உள்ள கோகர்ண மடம் பகுதியில் அமரேந்திர பாபு (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அருணா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அமரேந்திர பாபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் அமரேந்திர பாபுவை அழைத்து எச்சரித்து அனுப்பினார். இருப்பினும் அவர் மதுபோதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் நேற்று முந்தினம் அவருடைய மனைவி பொறுமையை இழந்தார்.

அதோடு ஒரு கத்தியை எடுத்து அவர் அருணாவை கொலை செய்ய பார்த்ததால் தன்னை கொன்று விடுவார் என்ற பயத்தில் அருணா கட்டயால் தன் கணவன் தலையில் அடித்தார். பின்னர் தரதரவென தெருவுக்கு இழுத்து வந்து ஒரு கயிறை வைத்து கணவனின் கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொன்றார். பின்னர் அருணா தலைமறை வாகிவிட்டார். இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அருணாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.