
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். மறு மார்க்கத்தில் எழும்பூரில் இருந்து ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் மூன்று மணிக்கு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.