சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 28ஆம் தேதி உறவினர் ஊருக்குச் சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் நடிகர் ரமணாவின் கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.