
சென்னை ராயப்பேட்டையில் சுமார் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையில் அந்த காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது ஆற்காடு நவாப் ஆட்சி செய்த போது சென்னையில் பல்வேறு இடங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்து உள்ளன. அச்சமயத்தில் சென்னை கடற்கரை அருகில் உள்ள சேப்பாக்கத்தில் 1768 முதல் 1855 ஆம் ஆண்டு வரை இவர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
பிறகு 1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களில் வாரிசு இழப்பு கொள்கையின் பிரகாரம் ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சென்றது. அப்போது திருவல்லிக்கேணி பிரதான சாலையில் ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில் இவர்கள் வாழ்ந்தனர். 1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்ட அமீர் மஹாலை ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தினார்கள். பிறகு ஆங்கிலேயர்களுடன் நல்ல உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை ஆற்காடு நவாப்பிற்கு வழங்கினர்.
அன்று முதல் இன்று வரை நவாப் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆற்காடு நவாபின் மன்னராக முகமது அப்துல் அலி நவாப் என்பவர் உள்ளார். அதேசமயம் அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்த சேப்பாக்கம் அரண்மனை அரசு உடமையாக்கப்பட்டு தற்போது தமிழக அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.