தில்லியின் வடகிழக்கு பகுதியான நெஹ்ரூ விகார் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டுப் பிறகு கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் மர்மமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறி சென்ற அந்த சிறுமி நீண்ட நேரம் வீடு திரும்பாததை அடுத்து அவரது தந்தை தேட ஆரம்பித்துள்ளார்.

தேடல் நடவடிக்கையின் போது, அருகிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வீட்டில் அவசரமாக கதவை உடைத்து உள்ளே சென்ற அவர், தனது மகளை நிர்வாணமாகவும் உயிரிழந்த நிலையில் ஒரு சூட்கேஸில் சடலமாக கண்டுள்ளார். உடனடியாக அருகிலுள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுமியின் முகம் உட்பட உடம்பில் பல காயங்கள் இருந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.