
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம் டிங்கா அம்ப் பகுதியில் நடைபெற்ற வருடாந்திர டங்கல் மல்யுத்தப் போட்டியில், சண்டையின் நடுவே மயங்கி விழுந்த ஜலந்தரைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சோனு, பின்னர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மனதை உலுக்கும் சம்பவம் அர்னோஹா கிராமத்தில் நடைபெற்ற போட்டியின் இறுதிகட்டத்தில் ஏற்பட்டது.
போட்டியின் இறுதிச் சுற்றில், சோனு மற்றும் டெல்லியைச் சேர்ந்த ரிங்கு என்ற மல்யுத்த வீரர் இடையே மிகுந்த உற்சாகத்துடன் சண்டை நடந்து கொண்டிருந்தது. இருவரும் தங்களின் முழு வீரத்தையும் காட்டி ஒருவருக்கொருவர் சமமாக களமிறங்கிய நிலையில், திடீரென சோனு மயக்கமடைந்து வளையத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து, உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் அவரது நிலையை கவனித்து, அவரை உடனடியாக ஹிராநகர் துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் சோனு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். நேரில் போட்டியை பார்த்தவர்கள் கூறுகையில், “சோனு மிகவும் உற்சாகமாக சண்டையிட வந்தார், ஆனால் இந்தப் பரிதாபமான முடிவு யாராலும் எதிர்பார்க்க முடியவில்லை. ஒருவேளை அவர் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் போட்டியில் கலந்துகொண்டிருக்கலாம்” என தெரிவித்தனர். போட்டியின் போது சோனுவின் நகர்வு நின்றதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
जम्मू-कश्मीर : कठुआ में कुश्ती के दौरान लड़ते-लड़ते पहलवान ने दम तोड़ा
◆ मृतक पहलवान जालंधर से कुश्ती लड़ने के लिए आया था #JammuKashmir | Kathua | #Kathua | Jammu Kashmir pic.twitter.com/ldYrK4g6eU
— News24 (@news24tvchannel) June 26, 2025
இந்த சம்பவத்தையடுத்து, போட்டியின் சூழ்நிலை துக்கத்தில் மாறியது. ஏற்பாட்டாளர்கள், போட்டியை உடனடியாக நிறுத்திவைத்து, வீரருக்கு மரியாதை செலுத்தினர். தற்போது, போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோனுவின் மரணத்திற்கான காரணம் உறுதி செய்ய, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், மல்யுத்த வீரர்களின் உடல்நல பரிசோதனை அவசியம் என்பதையும், போட்டிக்கு முன் மருத்துவ சோதனைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறது. மேலும் சோனுவின் இயற்கை மரணம் மல்யுத்த உலகிற்கு ஒரு பேரிழப்பாகும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.