திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் விடியற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.

இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று குமார் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி மழலை மொழியில் தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.