
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்ற மாணவன் கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்த நிலையில் 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்ற சிறுவன் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த மாதம் 21ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தற்போது ரிசல்ட் வந்த நிலையில் 433 மார்க் எடுத்துள்ளார். மேலும் சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று மாணவன் கனவு கண்டு வந்த நிலையில் விபத்தில் மாணவனின் கனவு கலைந்தது பெற்றோர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.