
வடசென்னை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 26 வயது ஆகிறது. இந்த நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுரேஷின் குடும்பத்தினர் பெங்களூரு சென்றதால் அவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். இதனால் தன் பாலின சேர்க்கையாளர்களுக்கான செயலி மூலம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஜெயந்தி நாதன் என்பவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
உடனே ஜெயந்திநாதன் எனது நண்பர்கள் உடன் இருக்கிறார்கள். நான் தனியாக வர முடியாது. அவர்களையும் அழைத்து வரட்டுமா என கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் சம்மதம் தெரிவித்ததால் அன்று இரவு 11 மணிக்கு ஜெயந்தி நாதனும் அவரது நண்பரான ஐயப்பன், தோழியான 17 வயது சிறுமி ஆகியோர் ஆட்டோவில் வந்தனர்.
இதனையடுத்து மூன்று பேரும் சேர்ந்து சுரேஷை கயிற்றால் கட்டி கழிவறையில் வைத்து பூட்டி சென்றனர். பின்னர் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயந்திநாதன், ஐயப்பன், சிறுமி ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சிகை ஏற்படுத்தியுள்ளது.